Photoshop விவகாரம்: இளவரசி கேட்டுக்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளதா அதிகரித்துள்ளதா?
இளவரசி கேட் அன்னையர் தினத்தன்று வெளியிட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட பிற நாடுகளிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், அந்த புகைப்பட சர்ச்சையைத் தொடர்ந்து இளவரசி கேட்டுக்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளதா அதிகரித்துள்ளதா என்று பார்த்தால், ஆச்சரிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
388 மடங்கு அதிகரித்த தேடல்கள்
ஆம், இணையத்தில் இளவரசி கேட் தொடர்பான தேடல்கள், 388 மடங்கு அதிகரித்துள்ளன. இளவரசி கேட் மற்றும் இளவரசர் வில்லியமுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாம்கிராம் கணக்கில் அவர்களைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை, 170,349 அதிகரித்துள்ளது.
கென்சிங்டன் மாளிகையின் எக்ஸ் கணக்கில் கூடுதலாக 48,016 பேர் வில்லியம் கேட் தம்பதியரைப் பின்தொடரத்துவங்கியுள்ளார்கள்.
Google Trends dataவைப் பொருத்தவரை, இளவரசி கேட், முன்னணியிலிருந்த ட்ரம்பையும், ஜோ பைடனையும் எலான் மஸ்கையும் தாண்டி முதலிடம் பிடித்துள்ளார்.
ஆக, புகைப்படத்தால் சர்ச்சை ஏற்பட்டாலும், அதுவும் இளவரசி கேட்டுக்கு ஆதரவை அதிகரித்தே உள்ளது என்பது இந்த தரவுகளிலிருந்து தெரிகிறது.