அரண்மனை வெளியிட்ட அனைத்து புகைப்படங்களும் ஆய்வு செய்யப்படும்: ஊடக அறிவிப்ப்பால் புதிய சிக்கல்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் அரண்மனை வெளியிட்ட அன்னையர் தின புகைப்படம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று முக்கிய முடிவெடுத்துள்ளது.
அனைத்து புகைப்படங்களும்
அரண்மனை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அனைத்து புகைப்படங்களும் ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதாக CNN அறிவித்துள்ளது. ஞாயிறன்று கேட் மிடில்டனின் குடும்ப புகைப்படம் ஒன்று, அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
ஆனால் அந்த புகைப்படமானது திருத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டது. அத்துடன் முதன்மையான செய்தி நிறுவனங்கள் பல தொடர்புடைய புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுத்தனர்.
எதிர்வரும் நாட்களில் தெரியவரும்
இந்த களேபரத்தை அடுத்து, தவறு நடந்துவிட்டது என குறிப்பிட்டு, கேட் மிடில்டன் மன்னிப்பும் கோரினார். இந்த நிலையில் புதிய திருப்பமாக, அமெரிக்காவில் இருந்து செயல்படும் CNN செய்தி நிறுவனம், இதுவரை அரண்மனை தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அனைத்து புகைப்படங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தெரியவரும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |