பிரித்தானிய மன்னராகும் இளவரசர் வில்லியம்: தம்பதியர் எடுத்துள்ள முதல் கட்ட நடவடிக்கை
இளவரசர் வில்லியம், கேட் தம்பதி அரியணை ஏற தயாராவதற்காக முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வில்லியம், கேட், இருவருமே வெளிநாட்டு சுற்றுலாவை விரும்புபவர்கள், அவர்கள் வெளிநாடுகளில் தம்பதியராக வலம் வந்த காட்சிகளை புகைப்படங்களில் பார்த்திருப்போம்.
ஆனால், இப்போது வெளிநாட்டுப் பயணங்களை தம்பதியர் தவிர்த்து வருகிறார்கள். ஒரு பக்கம் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், இன்னொரு பக்கம் வருங்கால மன்னர், ராணியாக அவர்கள் தயாராவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ராஜ குடும்ப நிபுணரான Katie Nicholl என்பவர் தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் மன்னர் மற்றும் ராணியாக தயாராவதற்காக அவர்கள் இனி பாரம்பரியமாக Norfolk, Amner Hall ஆகிய இடங்களில் மட்டுமே தங்குவார்கள், வெளிநாடுகளுக்கு செல்லமாட்டார்கள் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் அடுத்த மன்னராக தயாராகும் இளவரசர் சார்லஸ், தன் தாய் 95 வயதிலும் நல்ல உடல் நலத்துடன் தொடர்ந்து ஆட்சி செய்துவரும் நிலையில், காத்திருந்து களைத்துப்போனதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அப்படியே அவர் மன்னரானாலும், அவர் அரியணையில் அமரும் காலகட்டம் குறைவாகவே இருக்கப்போகிறது.
ஆக, அதற்கு அடுத்தபடியாக வில்லியமும் கேட்டும் அரியணை ஏற தயாராகத்தான் வேண்டும். ஆகவே, இப்போதே அதற்காக வெளிநாட்டு சுற்றுலாக்களை கைவிட்டு வீட்டில் பிள்ளைகளுடன் நேரம் செலவிடத் தொடங்கியுள்ளார்கள் அவர்கள்.