பிரித்தானியாவில் குழந்தைகளுக்காக புதிய அறக்கட்டளையை தொடங்கிய இளவரசி!
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் 10 வருட கடின உழைப்புக்குப் பிறகு, ஒரு பெரிய அறிவிப்பைக் வெளியிட்டுள்ளார்.
இளவரசி வில்லியமின் மனைவி மற்றும் கேம்பிரிட்ஜ் டச்சஸ் இளவரசி கேட் மிடில்டன் குழந்தைகளுக்காக புதிய அறக்கட்டளை மையம் ஒன்றை இன்று தொடங்குகிறார்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த The Royal Foundation Centre for Early Childhood அறக்கட்டளை, வருங்கால தலைமுறைகளுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆரம்ப காலகட்டத்திலேயே வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தும் என கேட் மிடில்டன் கூறியுள்ளார்.
குழந்தைகளின் வாழ்க்கையில் முதல் 5 வருடங்கள் மிகவும் இக்கட்டான காலகட்டம் என்றும், இந்த வயதில் ஏற்படும் தாக்கம் தான் குழந்தைகளின் வருங்காலத்தை மாற்றி அமைக்கும் என்று கேட் கூறுகிறார்.
மூன்று குழந்தைங்களுக்கு தாயான கேட் மிடில்டன் கூறுகையில், இந்த மையம் “அறிவை அதிகரிப்பதற்கும் சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்வதற்கும் உயர்தர ஆராய்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் ஆணையிடுதல், தனியார், பொது மற்றும் தன்னார்வத் துறைகளைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து புதிய தீர்வுகளில் ஒத்துழைக்க உதவுகிறது.
மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் செயலை ஊக்குவிப்பதற்கும் ஆக்கபூர்வமான பிரச்சாரங்களை உருவாக்குதல், ஆரம்ப ஆண்டுகளில் உண்மையான, நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும்' என்று கூறினார்.
மேலும் "குழந்தைங்களை வடிவமைப்பதன் மூலம், நாம் வருங்கால பெரியவர்கள் மற்றும் பெற்றோர்களை வடிவமைக்கிறோம்" என்று கேட் கூறியுள்ளார்.