புற்றுநோய் விவகாரம்... முக்கிய அரச குடும்பத்து நிகழ்ச்சி ஒன்றை தவிர்க்கும் கேட் - வில்லியம் குடும்பம்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் பாதிப்பை உறுதி செய்துள்ள நிலையில், அடுத்த வாரம் முன்னெடுக்கப்படவிருக்கும் ஈஸ்டர் ஆராதனைகளில் கேட் - வில்லியம் குடும்பம் பங்கெடுக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு ஆராதனை
பிரித்தானியாவின் எதிர்கால ராணியாரும், தற்போதைய வேல்ஸ் இளவரசியுமான கேட் மிடில்டன் புற்றுநோய் பாதிப்பை உறுதி செய்துள்ளதுடன், தாம் கீமோ சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கேட் மிடில்டன் தமக்கு புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் அறிவிக்கும் முன்னர், ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளில் கேட் - வில்லியம் குடும்பம் கலந்துகொள்ளும் என்றே நம்பப்பட்டது.
ஆனால் தற்போது ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளை தவிர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அரச குடும்பத்தினர் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளை தவிர்த்ததில்லை என்றும் கூறப்படுகிறது.
நம்பிக்கையை இழக்க வேண்டாம்
முன்னதாக, புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், கடந்த சில மாதங்களாக மிகவும் நெருக்கடியான சூழலை தங்களது மொத்த குடும்பமும் எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், புற்றுநோய் பாதிப்பை எதிர்கொள்ளும் எவரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும், நீங்கள் தனித்துவிடப்படவில்லை என்றும் கேட் மிடில்டன் குறிப்பிட்டுள்ளார்.
தமது பிள்ளைகள் மூவரிடத்திலும் இது குறித்து பகிர்ந்து கொண்டதாகவும், குணமடைந்து மீண்டு வருவேன் என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்ததாகவும் கேட் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |