பைக் டாக்சியில் பயணித்த கேரள பெண்ணுக்கு நேர்த்த கதி! உடந்தையாக இருந்த இளம்பெண்..அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் பைக் டாக்சியில் பயணம் செய்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேளிக்கை நிகழ்ச்சி
கேரளவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணொருவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு நண்பர்கள் வீட்டில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குறித்த இளம்பெண், தனது வீட்டிற்கு செல்ல பைக் டாக்சியை முன்பதிவு செய்துள்ளார்.
அவரை அழைத்துச் செல்ல வந்த ஓட்டுநர் சகாபுதீன் (26) என்பவர், குறித்த பெண் மதுபோதையில் இருப்பதை கவனித்துள்ளார். ஒரு கட்டத்தில் குறித்த இளம்பெண் மயக்க நிலைக்கு செல்லவே, அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற சகாபுதீன் தன் அக்பர் (24) என்பவரையும் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இருவரும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதற்கு சகாபுதீனின் காதலியும் உடந்தையாக இருந்துள்ளார். காலை இளம்பெண் எழுந்தபோது, நீங்கள் போதையில் இருந்ததால் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து நாங்கள் தான் பார்த்துக் கொண்டோம் என சகாபுதீனும், அவரது காதலியும் கூறியுள்ளனர்.
மருத்துவ பரிசோதனை
அதனை நம்பிய குறித்த பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு அதீத உடல்வலி, உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான விடயம் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பொலிஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, டாக்சி ஓட்டுநர் சகாபுதீன், அவரது காதலி மற்றும் அக்தர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
பைக் டாக்சியில் பயணம் செய்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.