மரணத்திற்கு முன் மனைவி அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்! கேரளாவை உலுக்கி வரும் சம்பவத்தில் முக்கிய திருப்பம்
கேரளாவில் 23 வயது இளம் பெண் வரதட்சனை கொடுமை காரணமாக கொல்லப்பட்டதாக கூறும் சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்மயா. 23 வயது மதிக்கத்தக்க இவர் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது, கிரண்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
திருமணத்தின் போது, 100 பவுன் நகை, டொயாட்டா கார், ஒரு ஏக்கர் நிலம் உட்பட ஏராளமான சீர்களை பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்துள்ளனர்.
ஆனால், இது எல்லாம் போதாது என்பது போல், மேலும் விஸ்மயாவிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். உடம்பெல்லாம் கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர்.
ஆணியால் குத்தி சித்ரவதை செய்துள்ளனர். இதை எல்லாம் பற்றி தன் பெற்றோரிடம் கூறி விஸ்யமா கூறி அழுதுள்ளார். இந்நிலையில், தான் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் விஸ்மயா இறந்து கிடந்தார்.
இது சம்பவம் குறித்து வாட்ஸ் அப், பேஸ்புக் என கேரளாவில் சமூகவலைத்தளங்களில் வைரலாக, இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.வரதட்சனை கொடுமை செய்து, அவரின் மரணத்திற்கு காரணமான கிரண்குமாரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
தனது மகனை கிரண்குமார் அடித்து கொன்றுவிட்டதாக பெண்ணின் பெற்றோர் கதறி புகார் கொடுத்தனர்.
மரணம் அடைவதற்கு முன்னர், தன்னை கணவர் அடித்து கொடுமைப்படுத்தியதையும், அதனால் ஏற்பட்ட காயத்தையும் அவர் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதை அவர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த புகைப்படங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு கிரண்குமார் பொலிசில் சரண் அடைந்தார்.
பொலிசாரிடம், தனக்கு வரதட்சணையாக தரப்பட்ட காரின் மைலேஜ் சரியில்லை என்று சொல்லி, அதற்கு பதிலாக பணம் கேட்டதாகவும், இதன் காரணமாக இரவு முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாக கூறிய அவர், தற்போது அவரை அடித்தது போல் காயங்களுடன் வரும் புகைப்படங்கள் எதுவும் உண்மையில்லை, எல்லாம் போலியானவை, உறவினர்கள் சொல்வது பச்சை பொய் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து கிரண்குமாரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, இவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார்.
கிரண் குமார் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சனை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.