இரட்டைக் குழந்தைகளுடன் வெளிநாடொன்றில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட கேரள தம்பதியர்...
அமெரிக்காவில், கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தங்கள் இரட்டைப் பிள்ளைகளுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குடும்பம்
திங்கட்கிழமை, அதாவது, பிப்ரவரி 12ஆம் திகதி, அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள விடு ஒன்றிற்கு அனுப்பப்பட்ட பொலிசார், அங்கு படுக்கையறை ஒன்றில் இரண்டு சிறுவர்கள் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
தொடர்ந்து அந்த வீட்டை சோதனையிடும்போது, குளியலறையில் இருவர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யார் அவர்கள்?
உயிரிழந்தவர்கள் ஆனந்த் ஹென்றி (38), அவரது மனைவியான ஆலிஸ் பிரியங்கா (37) மற்றும் தம்பதியரின் இரட்டைப்பிள்ளைகளான நோவாஹா மற்றும் நாதன் (4) என தெரியவந்துள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களான ஆனந்தும் ஆலிஸும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவந்துள்ளனர்.
பொறியாளர்களான இருவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளர்களாக பணியாற்றிவந்துள்ளார்கள். கலிபோர்னியாவில், 2 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார்கள் அவர்கள்.
அந்த குடும்பம் உயிரிழந்தது எதனால் என்பது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
UPDATE (2/13/24 at 1:15pm): SMPD Continues Death Investigation of Four People. Refer to https://t.co/TIlKNCDvgk for updated information.
— San Mateo Police Department (@SanMateoPD) February 13, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |