வாயில் ரத்தம் வழிந்தபடி கழிவறையிலிருந்து போன் செய்தாள்!! உயிரிழந்த பெண்ணின் தாய் கண்ணீர் பேட்டி
கேரளாவில் இளம் மருத்துவ மாணவியான விஸ்மியா நாயர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அவரது கணவரான கிரண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் கிரண்குமார். இவருக்கும் விஸ்மியா நாயர் (24) என்ற ஆயுர்வேத பெண் மருத்துவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் விஸ்மியா நேற்று கணவர் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவரது கணவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், விஸ்மியாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது.
திருமணத்தின் போது, 100 சவரன் தங்கமும், 1 ஏக்கர் நிலமும் கொடுத்துள்ளனர்.
அது போதாது என கிரண்குமார், விஸ்மியாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார், கணவரின் தொந்தரவு தாங்காமல் விஸ்மியா பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
எனினும் அவளின் கல்லூரிக்கு சென்று, விஸ்மியாவை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார் கிரண்குமார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், விஸ்மியாவை மிக கொடுமையாக அடித்துள்ளார் கிரண்குமார்.
தான் காயம் பட்ட புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு அனுப்பிய விஸ்மியா கதறி அழுதுள்ளார்.
ஒருகட்டத்தில் வாயில் ரத்தம் வழிந்தபடி, கழிவறையிலிருந்து விஸ்மியா, அவரது அம்மாவுக்கு போன் செய்துள்ளார்.
உடனே, இங்கு வா என அம்மா கூற, நான் கணவரை பிரிந்து வந்துவிட்டால் இந்த சமூகம் என்ன சொல்லும் என கூறியிருக்கிறார் விஸ்மியா.
மேலும் தன்னுடைய கல்லூ பரீட்சைக்கு பணம் கேட்ட போது, கிரண்குமார் கடுமையாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கிரண்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.