லண்டனில் துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய கேரளச் சிறுமி: நிலைமை கவலைக்கிடம் என தகவல்
லண்டனில், உணவகம் ஒன்றின்மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிச் சிறுமி ஒருத்தியும் சிக்கிய நிலையில், அவளுடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய கேரளச் சிறுமி
புதன்கிழமை இரவு 9.20 மணியளவில், லண்டனில், Hackney என்னுமிடத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தன் தந்தையான அஜீஷ், தாய் வினயாவுடன் உணவருந்திகொண்டிருந்திருந்திருக்கிறாள், கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த லிஸ்ஸல் மரியா (9).
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், உணவகத்தின் வெளியே அமர்ந்திருந்த மூன்று பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது, ஒரு குண்டு உணவகத்துக்குள் உணவருந்திக்கொண்டிருந்த மரியா மீது பாய்ந்துள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்ட முறையே 26, 37 மற்றும் 42 வயதுள்ள மூன்று ஆண்களும், சிறுமி மரியாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மரியாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |