காஷ்மீர் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
உயிர் தப்பிய நீதிபதிகள்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகளான அனில் நரேந்திரன், அஜித்குமார், கிரிஷ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
அவர்கள் பஹல்காம் பகுதியில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட சிறிது நேரத்திலேயே தீவிரவாதிகள் அப்பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதனால் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் நூலிழையில் உயிர் தப்பி உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |