நினைத்ததை நிறைவேற்றிய ஐயப்பன்! 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகம் செய்த பக்தர்
பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐயப்பன் தான் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவெற்றியதால், 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகத்திற்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் தான் நினைத்திருந்த காரியம் சபரிமலை ஐயப்பனின் அருளால் வெற்றிகரமாக நிறைவேறியதற்காக 18 படிகள், 18 மலைகளை நினைத்து நேர்த்திக்கடனாக 18 ஆயிரம் நெய் தேங்காய்களை அபிஷேகம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
இதன் காரணமாக, அவர் 18 ஆயிரம் தேங்காய், மற்றும் அபிஷேகத்திற்கு தேவையான நெய் ஆகியற்றை சேகரித்து லொரியில் பம்பைக்கு அனுப்பி வைத்துள்ளார். 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகத்திற்கு உரிய கட்டணமான 18 லட்சம் ரூபாய் சேக்கையும் தேவஸ்தான செயல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
லொரி மூலம் அனுப்பி வைத்த தேங்காய் மற்றும் நெய் ஆகியவற்றை தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பெற்றுக்கொண்டார். தேவஸ்தான ஊழியர்களின் உதவியுடன் 18 ஆயிரம் தேங்காய்களிலும் நெய்யை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
நெய் நிரப்பட்ட தேங்காய்கள் சபரிமலை சன்னிதானத்திற்கு டிராக்டர் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
இதையடுத்து நாளை காலை பெங்களூரு ஐயப்ப பக்தரின் சார்பாக 18 ஆயிரம் தேங்காய்களை உடைத்து ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்யப்பட உள்ளது.
சபரிமலை வரலாற்றிலேயே, ஒரே பக்தர் 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்துவது என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.