62 வயது நபரை கல்லாலடித்து பல்லை உடைத்த முதியவர்கள்: வேடிக்கை பின்னணி
கேரளாவில், 62 வயது நபர் ஒருவரை இரண்டு முதியவர்கள் கல்லாலடித்து அவரது பல்லை உடைத்துள்ளார்கள்.
வேடிக்கை பின்னணி!
பாலகிருஷ்ணன் (Malothu Balakrishnan) மற்றும் மேத்யூ (Mathew Valiyaplackkal) என்னும் இரண்டு முதியவர்கள், VJ பாபு (62) என்னும் நபரை கல்லால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் அவரது இரண்டு பற்கள் உடைந்துள்ளன. இந்த தாக்குதலுக்கான காரணத்தைக் கேட்டால் வேடிக்கையாக இருக்கிறது.
ஆம், இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட மூன்று பேரும் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரே பள்ளியில் படித்துள்ளார்கள்.
அப்போது மூன்று பேருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு பல வருடங்கள் மூன்று பேரும் நண்பர்களாக பழகிவந்துள்ளார்கள்.
இந்நிலையில், மூன்று பேரும் மீண்டும் ஹொட்டல் ஒன்றில் சந்தித்த நிலையில், பழைய சண்டை குறித்த பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது.
பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு, பாலகிருஷ்ணன் பாபுவை பிடித்துக்கொள்ள, மேத்யூ அவரைக் கல்லால் தாக்கியுள்ளார்.
இந்த சண்டைக்கு மதுபானமும் காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
பாபுவைத் தாக்கிய பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |