திருமண ஆசை காட்டி 13 வயது சிறுமியை ஆட்டோவில் அழைத்து சென்று சீரழித்த இளைஞன்! அதிர்வலையை கிளப்பிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு
இந்தியாவில் 13 வயது சிறுமியை சீரழித்த இளைஞனுக்கான தண்டனை விபரத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கேரளாவின் மூணாறு அருகே 13 வயது சிறுமியை கடந்த 2016ஆம் ஆண்டு அனுப் (23) என்ற இளைஞர் தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் அனுப்பை பொலிசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அவர் மீதான வழக்கு இடுக்கி முதல் வகுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் கொடூரன் அனுப்-புக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2.05 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை வசாரித்த நீதிபதி வர்க்கீஸ், இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.