விமான விபத்து: வேலையை ராஜினாமா செய்ய சென்ற பெண் உயிரிழப்பு
லண்டனில் செவிலியராக பணியாற்றி வந்த ரஞ்சிதா நாயர் என்ற கேரளப்பெண் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானார்.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் நேற்று மதியம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது, ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்துள்ளார்.
இவர்களில் கேரளாவை சேர்ந்த ரஞ்சிதா நாயர் என்ற பெண்ணும் ஒருவர். கேரளாவின் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா நாயர்(வயது 39), இவர் ஓராண்டாக லண்டனில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்துள்ளது.
இதற்காக கேரளா வந்த ரஞ்சிதா நாயர், லண்டனுக்கு சென்று ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவு செய்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி பலியானார், இச்சம்பவம் அவரது உறவினர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.