ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட கேரள செவிலியர் உடல் சொந்த ஊர் வருகை
அகமதாபாதில், ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவரவருடைய சொந்த ஊர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுவருகின்றன .
இந்நிலையில், அந்த விபத்தில் பலியான கேரள செவிலியர் ஒருவருடைய உடல் இன்று கேரளாவிலுள்ள அவரது சொந்த ஊரைச் சென்றடைந்துள்ளது.
கேரள செவிலியர் உடல் சொந்த ஊர் வருகை
Pathanamthitta என்னுமிடத்தைச் சேர்ந்த அந்த செவிலியரின் பெயர் ரஞ்சிதா (37). இரண்டு குழந்தைகளின் தாயான ரஞ்சிதாவின் உடல் இன்று அதிகாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அரண்மனையை வெறும் 75000 ரூபாய்க்கு விற்ற மன்னர்.., இறுதி காலத்தில் ரிக்ஷா ஓட்டி குடிசையில் வாழ்ந்த நிலை
பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் Pullad என்னுமிடத்திலுள்ள பள்ளி ஒன்றில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை, அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
ரஞ்சிதா பிரித்தானியாவில் செவிலியராக பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் அவர் பிரித்தானியா திரும்பும்போது துரதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் பலியானார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |