வேலைக்கு சென்றிருந்த தாயார்: வீட்டில் தனியாக இருந்த இள வயது மகளின் கொடுஞ்செயல்
இந்திய மாநிலம் கேரளாவில் குடியிருப்பில் தனியாக இருந்த கல்லூரி மாணவி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் முதுகலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி ஆதிரா(22) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சனிக்கிழமை மாலை நேரம் சுமார் 3 மணியளவில் சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாயார் சரஸ்வதி பணி முடித்து குடியிருப்புக்கு திரும்பிய நிலையில், வீட்டின் முன் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்துள்ளது.
கதவு திறக்க பலமுறை முயன்றும் பலனின்றி போகவே, ஒருகட்டத்தில், வலுக்கட்டாயமாக கதவை உடைத்து உள்ளே சென்ற சரஸ்வதி, அறைக்குள் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் மகள் ஆதிராவை கண்டுள்ளார்.
இதனிடையே, சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு குவிந்த அப்பகுதி மக்கள், ஆதிராவை மீட்டு அருகமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் ஏற்கனவே அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதிராவின் மரணம் குறித்து உறுதியான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆதிரா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.