ஒன்லைனில் விஷம் வாங்கி குடித்த மாணவர்! கல்லூரி விடுதியில் சோகம்
தமிழகத்தில் படித்து வந்த கேரள மாணவர் தற்கொலை குறித்த மாணவர்
ஒன்லைனில் விஷத்தை வாங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் கல்லூரி மாணவர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நிகில் (21) என்ற மாணவர் படித்து வந்தார்.
கேரளாவைச் சேர்ந்த நிகில் விடுதியில் தங்கி தனது படிப்பை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் மாணவர் நிகில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிகில் ஒன்லைனில் விஷத்தை வாங்கியது தெரிய வந்தது.
எனினும், மாணவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.