கேரள பெண்களை போல் நீளமான முடியை பெற உதவும் பூ.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக கேரளாவில் இருக்கும் பெண்களின் கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாக இருக்கும்.
அந்தவகையில், கேரளா பெண்களை போல நீளமான கூந்தலை பெற செம்பருத்தி பூவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி- ஒரு கப்
- செம்பருத்தி இலைகள்- 10
- செம்பருத்தி பூ- 10
- விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை எடுத்து நன்றாக கழுவி 5 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் செம்பருத்தி இலைகளை எடுத்து சிறிது சிறிதாக வெட்டி, அரிசி ஊறவைத்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் செம்பருத்தி பூவை சேர்த்து அடுப்பில் வைத்து அதிகமான தீயில் வேக வைக்கவும்.
அரிசி பாதி அளவு வெந்து வந்ததும் இதை ஆறவைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுக்கவும்.
இந்த நீரை ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்து குளிக்க செல்வதற்கு முன் இந்த தண்ணீரில் விளக்கெண்ணெய் கலந்து கொள்ளவும்.
பின்னர் அந்த தண்ணீரை உச்சந்தலையில் வேர்க்கால்கள் படும் அளவிற்கு நன்றாக தடவி மசாஜ் செய்யவும்.
20 நிமிடம் நன்றாக ஊற வைத்த பின்பு, மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முடி நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |