மலை இடுக்கில் 43 மணி நேரமாக சிக்கிய இளைஞர் மீட்பு! முடிவுக்கு வந்த நீண்ட போராட்டம்... திக் திக் வீடியோ
கேரளாவில் மலை மீது ஏறிய இளைஞர் மலை முகடு ஒன்றில் சிக்கி 43 மணி நேரத்துக்கும் மேலாக தவித்த நிலையில் ராணுவ வீரர்கள் அவரை நீண்ட போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்டுள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா மலையில் டிரக்கிங்காக ஏறிய பாபு என்ற 23 வயது இளைஞர் தவறி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக மலை முகடு ஒன்றில் சிக்கி கொண்ட அவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்தனர்.
இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியும் தோல்வியில் முடிய, ராணுவ உதவியை கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரினார். இதனையடுத்து, வெலிங்டன், பெங்களூருவில் இருந்து வந்துள்ள மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள், 43 மணி நேரமாக மலையில் சிக்கியிருக்கும் அவரை, பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
Watch: #Babu, the youth trapped in a steep gorge in #Malampuzha mountains in Palakkad, #Kerala has now been rescued.
— TOI Kochi (@TOIKochiNews) February 9, 2022
Teams of the Indian Army had undertaken the rescue operation. pic.twitter.com/JSq2Rvkg5w
கீழே தவறி விழுந்து சரசரவென இறங்கிய அவர் மலை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கிக் கொண்டார், இதையடுத்து பாபுவுக்கு கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இடுகான பகுதி என்பதால், பாபுவுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை அளிப்பதே மிகவும் சிரமமாகியுள்ளது. பின்னர் ஒருவழியாக கயிறு மூலம் அந்த இளைஞருக்கு உணவு வழங்கப்பட்டது.
அதேபோல் தண்ணீரும் அந்த இளைஞருக்கு வழங்கப்பட்டது. அவர் அருகில் சென்ற ராணுவத்தினர், நீங்கள் இனி தண்ணீர் கேட்டு கத்த வேண்டாம் . அது உங்கள் எனர்ஜியை மேலும் போக்கும். நீங்கள் கவனமாக இருங்கள். உங்களை காப்பாற்றி விடுவோம் என்று கூறினர்.
இந்த நிலையில் பாபு சற்றுமுன்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி பலரையும் நிம்மதி பெருமூச்சு அடைய செய்துள்ளது.
Good news! Trekker Babu who fell into a hill cleft in Kerala’s Palakkad district while hiking on Monday, stranding him for 2 days, has just been rescued by an Army team. ???? pic.twitter.com/CAh8W8iicw
— Shiv Aroor (@ShivAroor) February 9, 2022