மோடி உருவபொம்மையை கூண்டில் வைத்து கனடாவில் பேரணி - ஹிந்துக்களை நாடு கடத்த கோரிக்கை
கனடாவில் 18.6 லட்சம் இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகின்றனர். இதில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹிந்துக்கள் ஆவார்கள்.
ஹிந்துக்களை நாடு கடத்த வலியுறுத்தல்
இந்நிலையில், கனடாவில் உள்ள ஹிந்துக்களை நாடு கடத்துமாறு காலிஸ்தான் அமைப்பினர் பேரணி நடாத்தியுள்ளனர்.
இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரது உருவபொம்மையை கையில் விலங்கிட்டவாறு கூண்டுக்குள் நிற்பது போன்று சித்தரித்து, ஒரு வாகனத்தில் வைத்து பேரணியில் கொண்டு சென்றுள்ளனர்.
ஹிந்து அமைப்பு கண்டனம்
காலிஸ்தான் அமைப்பினரின் இந்த செயலுக்கு கனடிய ஹிந்து வர்த்தக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், "கனடாவில் 800,000 ஹிந்துக்களும் 18.6 லட்சம் இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகின்றனர்.
CHCC condemns the call at today’s Nagar Kirtan in Malton & Etobicoke demanding 800,000 Hindus leave Canada.
— Canadian Hindu Chamber of Commerce (@chcconline) May 4, 2025
There are 800,000 Hindus and over 1.86 million Indo-Canadians in Canada. The call at today's Nagar Kirtans in Malton & Etobicoke clearly targeted Hindus.
History… pic.twitter.com/nA9LOysIJ5
தற்போது ஹிந்துக்களை குறிவைத்து பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான போராட்டத்துக்கு அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
கனடாவில் காலிஸ்தான் செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு இந்திய அரசு தான் காரணம் என முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு குற்றம்சாட்டியது.
இதனையடுத்து, இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தியாவிற்கு எதிரான போராட்டங்களை காலிஸ்தான் அமைப்பினர் முன்னெடுத்தனர்.
இதனால், கட்சிக்குள் ஆதரவை இழந்த ட்ரூடோ, பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே ராஜிநாமா செய்தார். இதனையடுத்து, கடந்த வாரம் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவி ஏற்றார்.
இந்தியா உடனான உறவு சீரடையும் என கார்னி கூறி வந்த நிலையில், தற்போது மீண்டும் காலிஸ்தான் அமைப்பினர் இந்தியாவிற்கு எதிரான பேரணியை நடத்தியுள்ளனர்.