கனடாவில் இந்து கோவிலை தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்! சுவர்களில் இருந்த வாசகம் (வீடியோ)
கனடாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலில் தாக்குதல்
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சர்ரே நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமிநாராயண் கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரவு 3 மணியளவில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருவர் அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், நுழைவு வாயிலில் உள்ள தூணில் வாசகங்களை எழுதி வைத்து சென்றுள்ளனர்.
🚨 We strongly condemn the vandalism of Laxmi Narayan Mandir in BC by Khalistani extremists.
— Canadian Hindu Chamber of Commerce (@chcconline) April 20, 2025
This act of #Hinduphobia has no place in Canada.
We urge swift action & ask all Canadians to stand united against hate.
🛑 Silence is not an option.#CHCC #StopHinduphobia pic.twitter.com/flL0Or6Ezc
மேலும், அவர்கள் கோவிலில் இருந்து கண்காணிப்பு கமெரா ஒன்றையும் திருடிச் சென்றுள்ளனர்.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்
பொலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒட்டாவா நேபியனைச் சேர்ந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா,
"கனடாவில் உள்ள இந்து மற்றும் சீக்கிய சமூகங்கள் அவசரமாக எழுந்து மதத் தலங்களை சேதப்படும் பல சம்பவங்களைத் தொடர்ந்து, காலிஸ்தானி ஆதரவாளர்கள் மீது தீர்க்கமான அரசாங்க நடவடிக்கையைக் கோர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |