பிரித்தானியாவில் நிறவெறி தாக்குதல்? கோமாவுக்கு சென்ற கிரிக்கெட் வீரரின் தற்போதைய நிலை
பிரித்தானியாவில் தாக்குதலுக்கு உள்ளானதால் கோமா நிலைக்கு சென்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தற்போது குணமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் மர்ம நபர் ஒருவரால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமலோ திடீர் தாக்குதலுக்கு ஆளானார்.
இதனால் பலத்த காயமடைந்த குமலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வீரர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது நிறவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.
Photo Credit: Samuel Shivambu/BackpagePix
இந்த நிலையில், கோமாவில் இருந்து வெளியேறிய குமலோவின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. அவருக்கு மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ரத்தக்கட்டி அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குமலோவை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Photo Credit: Gallo Images