நடிகை குஷ்ப்புக்கு தோல்வியே கிடைக்கும்! வெளியான பிரபல தொலைக்காட்சியின் EXITPOLL கருத்து கணிப்பு
பிரபல திரைப்பட நடிகையானக் குஷ்பு இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள நிலையில், அவருக்கு தோல்வி தான் கிடைக்கும் என்று பிரபல தொலைக்காட்சி நடத்திய எக்ஸிட் போல் கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 6-ஆம் திகதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திரைப்பிரபலங்கள் சிலர் அவர்களுக்கு பிடித்த கட்சியிலும் இணைந்து, சில தொகுதிகளில் போட்டியிட்டனர்.
அந்த வகையில், பாஜக-வில் இணைந்த நடிகை குஷ்பு, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். நடிகை குஷ்புவை ஆதாரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அதுமட்டுமின்றி, குஷ்பு தனது வீட்டின் மீது கல்வீச்சு சம்பவம் குறித்து பிரச்சாரத்தில் மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். இந்நிலையில், பிரபல தமிழ் தொலைக்காட்சியான தந்தி டிவியின் கருத்துகணிப்புகள் நேற்றிரவு வெளியானது.
அதில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவிற்கு தோல்விய்டே கிடைக்கும் என்றும், அவரை எதிர்த்து திமுக சார்பில் நிறுத்தப்பட்ட டாக்டர் நா எழிலன் வெல்வார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆயிரம்விளக்கு தொகுதி திமுகவின் கோட்டையாக சொல்லப்பட்டாலும் நா எழிலனுக்கும் அத்தொகுதியில் நற்பெயர் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.