பிரித்தானியாவில் நபரை பட்டப்பகலில் கடத்தும் கும்பல்! அதிர வைத்த சிசிடிவி காட்சிகள்
இங்கிலாந்தின் யார்க்ஷயரில் மூன்று பேர் கொண்ட கும்பல் நபர் ஒருவரை கடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
பட்டப்பகலில் கடத்தல்
மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்ட் பகுதியில், கடந்த 6ஆம் திகதி நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர வைத்துள்ளது.
நபர் ஒருவர் சந்து பகுதியில் செல்லும் போது, சிவப்பு நிற வேனில் வந்த 4 பேர் அவரை பின்தொடர்கின்றனர்.
பின்னர் அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, அந்த கும்பல் வேனில் ஏற்றிக் கொண்டு கிளம்பியுள்ளது.
இது தொடர்பான காட்சிகள் அலி ரபீக் என்பவரின் சிசிடிவி கமெராவில் பதிவாகியதன் மூலம் தெரிய வந்துள்ளது.
யார்க்ஷயர் பொலிஸார் விசாரணை
மேலும் அவர் இச்சம்பவம் குறித்து கூறுகையில், ''நான் அதைப் பார்த்தபோது முழுவதுமாக அதிர்ச்சியடைந்தேன். அந்த நேரத்தில் நான் வீட்டில் இருந்ததால் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். யாரோ புலம்புவதையும், முனகுவதையும் நான் கேட்டேன் என்று நினைத்தேன்.
ஆனால் அது ஒரு வாக்குவாதம் என்று நினைத்தேன். அந்த காட்சிகளை மீண்டும் பார்த்தபோது தான் என்ன நடந்தது என்பதை உணர்ந்து உடனடியாக பொலிஸாருக்கு போன் செய்தேன். நான் வீட்டில் இல்லாமல், திரும்பிப் பார்க்காமல் இருந்திருந்தால் இது நடந்தது யாருக்கும் தெரியாது - இது மிகவும் பயமாக இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மேற்கு யார்க்ஷயர் பொலிஸார் கூறுகையில், 'பிராட்போர்டில் உள்ள Westcroft சாலையில் மார்ச் 6ஆம் திகதி புதன்கிழமை காலை 11 மணியளவில், ஒரு நபர் காயமடைந்ததைத் தொடர்ந்து கடத்தல் பற்றிய புகாரை விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவரின் தாடை மற்றும் விலா எலும்புகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது. பிராட்போர்டு சிஐடியால் விசாரணை நடந்து வருகின்றது' என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |