காலையில் பணிக்கு வந்த ஆசிரியை... வகுப்பறையில் கண்ட திடுக்கிட வைத்த காட்சி
ஜேர்மனியில் பள்ளி ஒன்றில் பணி புரியும் ஆசிரியை ஒருவர் காலையில் பணிக்கு வந்தபோது, வகுப்பறை ஒன்றில் மூன்று பேர் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.
அமைதியாக அவர் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் வந்து தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பியுள்ளனர். விசாரணையில், பக்கத்தில் உள்ள கடை ஒன்றிற்குள் நுழைந்து கொள்ளையடித்துவிட்டு அந்த மூவரும் பள்ளிக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கியது தெரியவந்துள்ளது.
பல கதவு ஜன்னல்கள் முதலியவற்றை அவர்கள் உடைத்ததில், 12,000 யூரோக்கள் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
Freiburg நகரில் நடந்த இந்த சம்பவத்தில், 17,21 மற்றும் 28 வயதுடைய அந்த
இளைஞர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.