மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்: இளவரசர் வில்லியம் கேட் தம்பதிக்கு உருவாகியுள்ள பதற்றம்
மன்னர் சார்லஸ் தனது 73ஆவது வயதில்தான் அரியணையேறினார். அதற்கு முன் தன் தாயுடனும், தனியாகவும் அவர் ஆற்றிய கடமைகள் ஏராளம். ஆகவே, அரியணையேறுவது அவருக்கு பதற்றமான ஒரு விடயமாக இருக்கவில்லை.
இளவரசர் வில்லியம் கேட் தம்பதிக்கு உருவாகியுள்ள பதற்றம்
ஆனால், இளவரசர் வில்லியமுக்கு 41 வயதுதான் ஆகிறது. கேட்டுக்கு 42 வயது. ஆக, அவர்களுக்கு பெரிய அளவில் அனுபவம் இல்லை எனலாம்.
இந்நிலையில், மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வில்லியம் விரைவில் அரியணையேறும் நிலை ஏற்படலாம்.
ஆகவே, அரியணையேறும் விடயம் வில்லியமுக்கும் கேட்டுக்கும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார் Tina Brown என்னும் ராஜ குடும்ப நிபுணர்.
ஆனால், ஒரு நல்ல செய்தி, 1952ஆம் ஆண்டு, சார்லசுடைய தாயாரும் வில்லியமுடைய பாட்டியுமான இரண்டாம் எலிசபெத் அரியணையேறும்போது அவருக்கு வயது 25 மட்டுமே.
அதுவும், தன் தந்தை திடீரென மரணமடைந்ததால் உடனடியாக அரியணையேறும் ஒரு கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அவர் எத்தனை ஆண்டுகள், எப்படி திறம்பட ஆட்சி செய்தார் என்பது உலகறிந்த விடயம். ஆக, வில்லியமும் கேட்டும் தங்கள் பாட்டியார் அரியணையேறிய விடயத்தை நினைவுகூர்ந்தாலே கவலைப்படவோ பதற்றப்படவோ வேண்டிய அவசியம் இருக்காது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |