பிரித்தானிய அரியணையேறும் வரிசையில் 68ஆவது நபர் தலைமறைவு: வலைவீசித் தேடும் பொலிசார்
பிரித்தானிய மன்னரின் தூரத்து உறவினரும், அரியணையேறும் வரிசையில் 68ஆவதாக உள்ளவருமான ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிசார் அவரை வலைவீசித் தேடிவருகிறார்கள்.
பிரித்தானிய மன்னரின் தூரத்து உறவினர் தலைமறைவு
பிரித்தானிய மன்னரான சார்லசுடைய தாயாகிய எலிசபெத் மகாராணியின் தந்தையான ஆறாம் ஜார்ஜின் மகளுடைய கொள்ளுப்பேத்தியின் மகனான ரோவன் (Rowan Lascelles, 46) என்பவரே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மகாராணியின் சகோதர உறவு முறையினரான ஜேம்ஸ் (James Lascelles) என்பவரின் மகனான ரோவனை பொலிசார் வலைவீசித் தேடிவருகிறார்கள்.
வழக்கமாகவே வன்முறை, மிரட்டல்கள், இனரீதியான தாக்குதல்களில் ஈடுபடுபவர் என்று பெயரெடுத்த ரோவன், கருப்பின உணவக ஊழியர் ஒருவரை மீண்டும் மீண்டும் இனரீதியாக அவமதித்துள்ளார்.
(Image: Google)
அத்துடன், தொண்டு நிறுவன அலுவலகம் ஒன்றின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்ததுடன், தொண்டு நிறுவன பெண் ஊழியர் ஒருவரை மிரட்டியுள்ளார்.
பயந்து நடு நடுங்கிய அந்த பெண், பொலிசாரை அழைக்க, பொலிசார் வருவதற்குள் தப்பியோடிய ரோவன், தலைமறைவாகிவிட்டார். பொலிசார் அவரை வலைவீசித் தேடிவருகிறார்கள்.
(Image: Google)