அபராதம் செலுத்த வேண்டும்... பொதுமக்களிடம் உதவி கோரும் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர்
மன்னர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீசிய வழக்கில் கைதாகியுள்ள இளைஞர் தற்போது சட்ட சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில், பொதுமக்களிடம் நிதியுதவி கோரியுள்ளார்.
இதன்பொருட்டு, 10,000 பவுண்டுகள் திரட்டுவதற்காக பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என இணைய பக்கம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, குறித்த இணைய பக்கம் நீக்கப்படும் முன்னர் அவருக்கு 178 பவுண்டுகள் உதவி கிடைத்துள்ளது.
பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும்
மொத்தம் 18 பேர்கள் குறித்த இளைஞருக்கு நிதியுதவி அளித்துள்ளனர். யோர்க் பல்கலைக்கழக மாணவாரன 23 வயது Patrick Thelwell தற்போது 6 மாத சிறை தண்டனை மற்றும் 5,000 பவுண்டுகள் அபராதத்தையும் எதிர்நோக்கியுள்ளார்.
@PA
அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஊடாகவும் நிதியுதவி தொடர்பில் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், பொதுவெளியில் இனி அவர் முட்டை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யார்க்ஷயர் பகுதியில் மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி பொதுமக்களை சந்திக்கும் பொருட்டு, நடந்து செல்கையில் Patrick Thelwell அவர்கள் மீது முட்டை வீசியுள்ளார்.
@getty
மூன்று முறை முயன்றும், அவருக்கு குறி தப்பியதாகவே தெரியவந்துள்ளது. மேலும், சம்பவத்தின் போது திரண்டிருந்த மக்களில் சிலர் கடுமையாக கூச்சலிட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.