ஆங்கிகரிக்கப்பட்ட மன்னர் சார்லஸ் III-ன் புதிய முத்திரை! வெளியான புகைப்படம்
மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய பெரிய நிர்வாக முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.
மன்னர் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை
மன்னர் சார்லஸ் III-ன் ஆட்சியின் முறையான கட்டமைப்பு நிறைவுற்ற ஒரு முக்கியமான கட்டமாக, அவரது தனிப்பட்ட அரசு முத்திரை (Great Seal of the Realm) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த முத்திரை, தங்க முலாம் பூசப்பட்ட சின்னமாகும்.
இது அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்களில் அரச ஒப்புதலைக் குறிக்கிறது.
இதன் முதன்மை பக்கத்தில் மன்னர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த முத்திரையின் பின்புறம், கலைஞர் திமோதி நோடால் வடிவமைக்கப்பட்ட அரச இலச்சினையை காட்டுகிறது.
மன்னர் சார்லஸ் III சமீபத்தில் நடைபெற்ற ஒரு ரகசிய கவுன்சில் கூட்டத்தில் தனது ஒப்புதலை வழங்கினார்.
இது, அவர் முடிசூடிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சம்பிரதாய மாற்றத்தின் இறுதிக் கட்டமாகும்.
கடைபிடிக்கப்பட்ட மரபு
நீண்டகால மரபின்படி, இந்த கூட்டத்தில் ஒரு அடையாளப்பூர்வமான செயல் இடம்பெற்றது.
அதன்படி, ராணி எலிசபெத் II-ன் முத்திரை அடையாளப்பூர்வமாக சுத்தியலால் அடிக்கப்பட்டது.
இந்தச் செயல் அதன் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதையும், அதே நேரத்தில் வரலாற்றுப் பதிவுகளுக்காக பாதுகாப்பதையும் குறிக்கிறது.
இந்த புதிய அரசு முத்திரை, 2022 இல் வெளியிடப்பட்ட மன்னரின் உருவம் மற்றும் நாணயங்களுடன், ராயல் மின்ட் தயாரித்த சமீபத்திய அரச கலை பொருளாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |