அடுத்த வாரிசை விரைந்து முடிவு செய்ய திட்டமிடும் மன்னர் சார்லஸ்: கசிந்த தகவல்...
மன்னர் தனது வாரிசை முடிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நினைத்ததைவிட மோசமான நிலையில் மன்னர்
மன்னர் சார்லசுக்கு வந்துள்ள புற்றுநோய், நினைத்ததைவிட அதிக ஆபத்தானது என ராஜ குடும்ப எழுத்தாளரும் நிபுணருமான Tom Quinn என்பவர் தெரிவித்துள்ளார்.
மன்னர் 80 வயதுகள் வரையாவது வாழ்வார் என முதலில் நம்பப்பட்ட நிலையில், அவரது புற்றுநோய் அதிக ஆபத்தானது என தெரியவந்துள்ளதாகவும், ஆகவே, அடுத்து மன்னராக இருப்பவரை விரைவாக முடிவு செய்யும் முயற்சியை அவர் துவங்கியுள்ளதாகவும், அதை ரகசியமாக வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஹரியை நம்பமுடியாது, என்ன விடயம் தெரியவந்தாலும் அவர் உடனடியாக ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க ஓடிவிடுவார் என்பதால், அவரிடமிருந்து இந்த விடயம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் Tom Quinn தெரிவித்துள்ளார்.
தனக்கு அடுத்து அரியணை ஏறுபவராக, மன்னர் சார்லஸ் இளவரசர் வில்லியமைத்தான் தன் மனதில் வைத்துள்ளார் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |