மன்னர் சார்லசால் மோசமான பெயரில் அழைக்கப்பட்ட இந்தியர் மரணம்
மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு நெருக்கமான இந்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இளவரசர்களுக்கு நெருக்கமான இந்தியர்
இந்தியாவில் பிறந்தவரான குல்தீப் சிங் (Kuldip Singh Dhillon, 72), பிரித்தானியாவில் போலோ கிளப் ஒன்றின் சேர்மனாக இருந்தவர். அவ்வகையில், அவர் அப்போது இளவரசராக இருந்த சார்லஸ், மற்றும் அவரது பிள்ளைகள் வில்லியம் மற்றும் ஹரிக்கு நெருக்கமாகியுள்ளார்.
இந்த வாரத் துவக்கத்தில் இந்தியாவுக்குச் சென்றிருந்த நிலையில் குல்தீப் சிங் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Credit: Rex
2009இல் உருவான சர்ச்சை
2009ஆம் ஆண்டு, இளவரசர் சார்லஸ் குல்தீப் சிங்கை 'Sooty' என அழைத்த விடயம் சர்ச்சையை உருவாக்கியது.
'Sooty' என்பதன் ஒரு பொருள் கருப்பு என்பதாகும். ஆக, தோலின் நிறத்தின் அடிப்படையில் சார்லஸ் குல்தீப் சிங்கை 'Sooty' என அழைக்க, அந்த காலகட்டத்தில் அந்த விடயம் சர்ச்சையை உருவாக்கியது.
ஆனால், தன்னை தன் நண்பர்கள் செல்லமாக 'Sooty' என அழைப்பதுண்டு என்று கூறியிருந்த குல்தீப் சிங், அதனால் தனக்கு வருத்தமில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.