மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய மன்னர் சார்லஸ்: ஒரு திகில் அனுபவம்...
மன்னர் சார்லஸ் மன்னராவதற்கு முன் தன் வாழ்வில் பல்வேறு அனுபவங்களை சந்தித்துள்ளார்.
ஒருமுறை மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பியுள்ளார் அவர்.
இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றது முதல், அவரது வாழ்வில் நிகழ்ந்த பல சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிவருகின்றன.
Image: Getty
அவற்றில் திகிலை ஏற்படுத்திய ஒரு தகவலை இங்கு காணலாம்.
1988ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா, இளவரசி சாரா மற்றும் இளவரசரின் நண்பர்கள் சிலர் சுவிட்சர்லாந்துக்கு விடுமுறைக்காக சென்றிருந்தபோது பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளார்கள்.
Image: Patrice PICOT/GAMMA-RAPHO
அப்போது, பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படாத, ஓரிடத்துக்கு இளவரசர் சார்லஸ், ஒரு வழிகாட்டி, Major Hugh Lindsay, Patti Palmer-Tomkinson என்னும் இளவரசர் சார்லஸின் நண்பர்கள் மற்றும் சுவிஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.
அப்போதே இளவரசர் சார்லஸ் பனிச்சறுக்கு விளையாட்டில் கைதேர்ந்தவர்.
Image: Getty
அப்படி அவர்கள் அந்த சவால் மிக்க இடத்தில் பனிச்சறுக்கு செய்துகொண்டிருக்கும்போது, திடீரென ஒரு பனிப்பாறைச்சரிவு உருவாகியிருக்கிறது.
வேகமாக அனைவரும் பாதுகாப்பான ஒரு இடம் நோக்கி விரைய, Major Hugh Lindsay மற்றும் Patti Palmer-Tomkinson ஆகிய இருவரும் பனியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
Image: Getty
Palmer-Tomkinsonஇன் கால்களில் பலத்த காயம் ஏற்பட, Lindsayயோ 400 மீற்றர் பள்ளத்தில் விழுந்திருக்கிறார்.
பனி அமர்ந்ததும், சார்லஸ் உட்பட மற்றவர்கள் வேகமாகச் சென்று, பனிக்குள் புதைந்திருந்த இருவரையும் தோண்டி எடுக்க, Lindsay உயிரிழந்துவிட்டிருக்கிறார்.
Lindsayக்கு அப்போது 34 வயதுதான். அத்துடன், அவரது மனைவியும் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.
அப்போது சார்லஸ் மரணத்தை அருகில் சந்தித்த பின்னும் உயிர் தப்பிவிட்டாலும், தன் நண்பரின் மரணத்தால் அவர் நிலைகுலைந்து போயிருந்ததாக அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.