நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதிய மன்னர் சார்லஸ்: பின்னணியில் ஒரு முக்கிய முடிவு
அரசின் ஆலோசகர்கள் பட்டியலில் தனது சகோதரி மற்றும் சகோதரரையும் இணைக்க மன்னர் சார்லஸ் விரும்புகிறார்.
நாடாளுமன்றத்திற்கு மன்னர் எழுதியுள்ள கடிதம்
அரசின் ஆலோசகர்கள் பட்டியலில் தனது சகோதரி மற்றும் சகோதரரையும் இணைக்கக் கோரி மன்னர் சார்லஸ் நாடாளுமன்றத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தற்போது, அரசின் ஆலோசகர்கள் என்ற பொறுப்பில் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசி பீட்ரைஸ் ஆகியோர் உள்ளனர். மன்னரின் மனைவி என்ற முறையில் ராணி கமீலாவும் தன் கணவர் சார்பில் இந்த பொறுப்பை நிறைவேற்றலாம்.
image: 2022 Buckingham Palace
இந்நிலையில், தனது சகோதரியாகிய இளவரசி ஆன் மற்றும் தனது சகோதரர் இளவரசர் எட்வர்ட் ஆகியோரையும் அரசின் ஆலோசகர்கள் பட்டியலில் இணைக்க விரும்புகிறார் மன்னர் சார்லஸ்.
அதை முறைப்படி செய்வதற்காக தக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தின் மேலவைக்கு கடிதம் எழுதியுள்ளார் மன்னர்.
அரசின் ஆலோசகர்கள் என்பவர்கள் யார்?
பிரித்தானிய சட்டப்படி, மன்னரின் மனைவி, மற்றும் அரியணை ஏறும் வரிசையில் உள்ள, 21 வயதுக்கு மேற்பட்ட முதல் நான்கு பேர் அரசின் ஆலோசகர்கள் ஆவர்.
Image: 2019 Mark Cuthbert
மன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ, வெளிநாடு சென்றிருந்தாலோ, அதனால் அரசின் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், மன்னர் சார்பில் கடமையாற்ற இந்த அரசின் ஆலோசகர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மன்னர் சார்லசைப் பொருத்தவரை, நான்கு பேர் என்னும் அந்த எண்ணிக்கையை மாற்ற அவர் விரும்புகிறார். இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் ஏற்கனவே அரசின் ஆலோசகர்களாக பொறுப்பு வகித்து வரும் நிலையில், அவர்களையும் அந்த பொறுப்பிலிருந்து நீக்காமல், அதே நேரத்தில் தனது சகோதரர் மற்றும் சகோதரிக்கும் அந்த பட்டியலில் இடம் கொடுக்க விரும்புகிறார் அவர்.
Image: 2014 Getty Images