மன்னர் பதவி விலகவேண்டும்... பதவியேற்று ஓராண்டு நிறைவு நாளுக்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
மன்னர் சார்லஸ் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால், ஒரு கூட்டம் மக்கள் லண்டனில் திரண்டு, மன்னர் வேண்டாம் என குரல் எழுப்பிய சம்பவம் நேற்றே நிகழ்ந்துள்ளது.
பதவியேற்று ஓராண்டு நிறைவு
கடந்த ஆண்டு, மே மாதம் 6ஆம் திகதி, சார்லஸ், பிரித்தானிய மன்னராக முடிசூட்டப்பட்டார். ஆக, அவர் மன்னராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
ஆகவே, இன்று, துப்பாக்கிக்குண்டுகள் முழங்க, மன்னருக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.
எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
ஆனால், நேற்றைய தினமே, லண்டனிலுள்ள Trafalgar சதுக்கத்தில் திரண்ட சுமார் 100 பேர், மன்னர், பதவியைத் துறக்கவேண்டும், மன்னராட்சியை ஒழிக்கவேண்டும் என்றெல்லாம் முழக்கம் எழுப்பினார்கள்.
அவர்கள், மன்னராட்சியை எதிர்க்கும் Republic என்னும் அமைப்பின் ஆதரவாளர்கள் ஆவர். லண்டனில் இந்த எதிர்ப்பு பேரணி நடைபெற்ற அதே நேரத்தில், எடின்பர்க் மற்றும் Cardiffஇலும் இதேபோன்ற பேரணிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |