கொல்கத்தா கேப்டன் இயன் மோர்கனுக்கு 24 லட்சமும்.. ஒவ்வொரு வீரருக்கும் தலா 6 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல்!
கொல்கத்தா அணியின் கேப்டன் இயம் மோர்கனுக்கு 24 லட்சமும், பிளேயிங் லெவனில் விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும் போட்டி சம்பளத்தில் தலா 25% (6 லட்சம்) அபரதமாக ஐபிஎல் விதித்துள்ளது.
செப்டம்பர் 23ம் திகதி (வியாழக்கிழமை) இரவு அபு தாபி மைதானத்தில் நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்து வீசாமல் கொல்கத்தா அணி அதிகமான நேரம் பந்து வீசுவதற்கு எடுத்துக்கொண்டதற்காக ஐபிஎல் அபராதம் விதித்துள்ளது.
ஒரு ஐபிஎல் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பந்து வீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டது தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் கீழ் இந்த சீசனில் இரண்டாவது முறையாக மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டுள்ளது.
இதற்காக கொல்கத்தா அணித்தலைவர் இயன் மோர்கனுக்கு 24 லட்சமும், பிளேயிங் லெவனில் விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும் போட்டி சம்பளத்தில் தலா 25% அபராதம் விதிப்பதாக ஐபிஎல் அறிவித்துள்ளது.