டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக இருப்பது... மனம் திறந்த நட்சத்திர வீரர் கே.எல் ராகுல்
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து கே.எல் ராகுல் மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், கடினமான இந்த கிரிக்கெட் பயணத்தில் டோனி போன்ற ஒரு நம்பிக்கை ஆலோசகர் கிடைத்திருப்பது பெரும் அதிர்ஷ்டம். அவர் மீண்டும் அணிக்குள் இருப்பது பிரமாதமான ஒரு விஷயம்.
அவர் கேப்டன்சியில் ஆடியிருக்கிறோம், அவர் கேப்டனாக இருக்கும்போதே எங்களுக்கெல்லாம் நம்பிக்கை ஆலோசகர்தான். அவர் கேப்டனாக இருக்கும் போது ஓய்வறை கலகலப்பாக இருக்கும்.
அவரது அமைதி எங்களுக்குப் பிடிக்கும். அவருடன் நேரம் செலவிடுவதை நான் மகிழ்ச்சியுடன் தான் செய்துள்ளேன்.
அவருடன் நேரம் செலவிடுவது ஒரு கேளிக்கைதான். கிரிக்கெட் பற்றி அவர் மூளையைக் கசக்குவதை எதிர்நோக்குகிறேன் என கூறியுள்ளார்.