கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு புதிய அணியால் வந்த பிரச்சனை? ஐபிஎல்லில் விளையாட தடை வரலாம்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்க வைப்பு விஷயத்தில் கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத்கான் இருவருமே அதற்கு வேண்டாம் கூறிக் கொண்டே நிலையில், அதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் சேர்கப்பட்டுள்ளன.
இதனால் ஐபிஎல் அணியின் எண்ணிக்கை இப்போது 10-ஆக அதிகரித்துள்ளதால், பழைய அணியில் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதில், பழைய அணிகள் தங்கள் அணியில் உள்ள 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை பிசிசி கொடுத்திருந்தது.
அதற்கான காலக்கெடு நேற்றோடு முடிவடைந்ததால், அந்தந்த அணி யார் யாரை எல்லாம் தக்க வைக்கப் போகிறோம் என்ற பட்டியலை அறிவித்தது.
பஞ்சாப் அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல், ஹைதராபாத் அணியில் எதிர்பார்க்கப்பட்ட ரஷீத்கான் ஆகிய இருவருமே தக்க வைத்துக் கொள்ளப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் லக்னோ அணி தான் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் லக்னோ அணி ராகுலை 20 கோடிக்கும், ரஷீத்கானை 16 கோடிக்கும் வாங்க முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக அவர்கள் தங்கள் அணியில் தொடர்ந்து இருக்க சம்மதிக்கவில்லை, விதிமுறைக்கு அப்பாற்பட்டு லக்னோ அணி அணுகியதால் சம்பந்தப்பட்ட பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் கிரிக்கெட் வாரியத்திடம் வாய்மொழியாக புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை பெரிதாக எடுத்துக் கொண்டு பிசிசிஐ ஒருவேளை விசாரணை மேற்கொள்ளும் போது, அது உண்மை என நிரூபிக்கப்பட்டால் இவர்கள் இருவரும் அடுத்தாண்டு ஐபிஎல்லில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.