முறைத்துக் கொண்டே கடும் கோபத்தில் திட்டிய ராகுல்: வைரலாகும் வீடியோ
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ராகுல் பண்ட்டை திட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிய நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கி நடந்தது, இந்த போட்டியில் இந்தியா டொஸ் வென்ற நிலையில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
தொடக்க வீரர்களாக, ராகுல் மற்றும் தவான் களமிறங்கிய நிலையில், தவான் 29 ரன்களிலும், கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
— Addicric (@addicric) January 21, 2022
கோலி அவுட்டான பிறகு, ரிஷப் பண்ட் களமிறங்கினார். கேசவ் மகாராஜ் வீசிய பந்தை எதிர்கொண்ட பண்ட், அதனை ஆன் சைட் பக்கம் அடித்தார். தொடர்ந்து, அந்த பந்திற்கு பண்ட் மற்றும் ராகுல் ஆகியோர், ரன் ஓட முயற்சித்துள்ளனர்.
ஆனால், அப்பகுதியில் ஃபீல்டிங் நின்ற பாவுமா, வேகமாக பந்தை பிடித்து, பவுலர் திசையில் வீசினார்.
இரு பேட்ஸ்மேன்களும், பேட்டிங் பக்கம் நிற்க, ரன் அவுட் செய்ய வாய்ப்பு இருந்தும் அதனை மகாராஜ் தவற விட்டார். இதனால், வேகமாக ஓடிய ராகுல், மீண்டும் கிரீஸுக்குள் சென்றார்.
தவறான அழைப்பின் காரணமாக, பண்ட்டை முறைத்துப் பார்த்த ராகுல், கோபத்தில் அவரை ஏதோ வசை பாடவும் செய்தார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.