நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி நட்சத்திர வீரர் விலகல்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் இருந்து கே எல் ராகுல் விலகியுள்ளார்.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் 25ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுகிறார்.
அடுத்ததாக இரண்டாவது போட்டியில் விராட் கோலி அணியுடன் இணைய இருக்கிறார். இந்த தொடரில் ஏற்கனவே தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து நட்சத்திர வீரரான ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடைவு என சொல்லப்படுகிறது.
அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.