ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித்துக்கு துணை கேப்டன் யார்? வெளிப்படுத்திய பிசிசிஐ அதிகாரி
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டன் யார் என்பது குறித்து பிசிசிஐ அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் உள்ளது.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ அதிகாரி கூறியதாவது, கே.எல்.ராகுல் அடுத்த துணை கேப்டனாக நியமிக்கப்படுவார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை பொறுத்த வரை இது ஒரு சரியான தேர்வாக இருக்கும்.
கடந்த சில வருடங்களாக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். இன்னும் 6-7 வருடங்கள் அடுத்த கேப்டனாக வரலாம்.
டிராவிட், ரோகித் மற்றும் விராட் இருப்பதால், அவர்களிடமிருந்து அவர் நிறைய கற்றுக்கொள்வார் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.