இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக இவர் சரியாக இருப்பார்! சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்
இந்திய அணிக்கான அடுத்த டி20 கேப்டனாக யார் சரியாக இருப்பார் என்பது குறித்து, முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், நான் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கோலி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கோலியின் இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கோலி இந்த முடிவை எடுத்துள்ளதால், அவரை முன்னணி வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்திய அணிக்கு அடுத்த டி20 கேப்டனாக யார் இருப்பார் என்ற கேள்வி இப்போதே எழுந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், தன்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு புதிய கேப்டன் என்றால் அதற்கு கே.எல்.ராகுல் சரியாக இருப்பார்.
இதுவரை அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால், கே.எல் ராகுலை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக உருவாக்க முயற்சி செய்யலாம். அதற்கு முதலில் இவரை துணைக் கேப்டனாக வைத்து, அதன் பின் கேப்டன் ஆக அறிவிக்கலாம் என்ற யோசனை கூறியுள்ளார்.