கே.எல்.ராகுல் அவுட் ஆன போது நோ பாலை பார்க்காமல் விட்ட நடுவர்? கதறும் ரசிகர்கள்: வைரலாகும் வீடியோ
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், நடுவர்களை ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக்கோப்பை தொடரி சூப்பர் 12-வில் போட்டியில் நேற்று மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 151 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அதன் பின் ஆடிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில் துவக்க வீரரான கே.எல்.ராகுல், ஆட்டத்தின் 2.1-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் Shaheen Afridi பந்து வீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
அசுர வேகத்தில் வந்த பந்தை கே.எல்.ராகுல் கணிப்பதற்குள் பந்தானது போல்டில் பட்டுவிட்டது. இதனால் ராகுல் என்ன செய்வது என்று தெரியாமலே மைதானத்தை விட்டு அப்படியே வெளியேறினார்.
ஐபிஎல் மற்றும் பயிற்ச்சி போட்டிகளில் கே.எல்.ராகுல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், நிச்சயமாக இந்த போட்டியில் அவரின் ஆட்டம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெறும் 3 ஓட்டங்களில் அவுட் ஆகி ஏமாற்றினார்.
இந்நிலையில், கே.எல்.ராகுல் அவுட் ஆன பந்து ஒரு நோ பால், இதை நடுவர் கவனிக்க தவறிவிட்டார், தூங்கிவிட்டார் என்று கூறி, ரசிகர்கள் அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.