உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் வெற்றி எப்படி இருக்கிறது? உருக்கமாக பேசிய வில்லியம்சன்
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் வெற்றி குறித்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் ஆன கானே வில்லியம்சன் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் இருந்த நியூசிலாந்து அணியின் கனவு நினைவானது. இது குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் ஆன கானெ வில்லியம்சன் கூறுகையில், இது மிகவும் ஒரு சிறப்பான உணர்வு. ஆனால், அதே சமயம் நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய நாள் இது என்று நான் சொல்லப்போவதில்லை.
இந்தியா ஒரு வலிமை மிக்க அணி, சில கடினமான சவால்கள் இருக்கும் என்பதை நாங்கல் அறிந்தோம். இரு அணிகளும் சிறப்பாகவே விளையாடியது. அந்த ஆறாவது நாள் ஆட்டம் தான் வெற்றியை மாற்றிவிட்டது.
இது எங்கள் வரலாற்றில் மிகவும் பெருமையான தருணம். ஒரு அணியாக நாங்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டு, ஒரு வெற்றியை பெற்றிருப்பது, சிறந்த உணர்வை கொடுத்துள்ளது.
நாங்கள் இதற்கு முன்பு இதே போன்று சில ஐசிசி டிராபிகளில் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளோம், இதனால் இதன் வெற்றி மற்றும் தோல்வியைப் பற்றி என்னால் உணர முடியும் என்று கூறினார்.