லண்டனில் மகளை கேலி செய்தவர்களை தட்டி கேட்டதால் கொல்லப்பட்ட தந்தை இவர்தான்... புகைப்படம் வெளியானது
லண்டனில் தன் மகளை கேலி செய்து துன்புறுத்தியவர்களை தட்டிக்கேட்டதால் கொல்லப்பட்ட தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கிழக்கு லண்டனில் வாழும் Jamie Markham (45)இன் மகள் Chloeயை(17) சில இளைஞர்கள் கேலி செய்து வந்துள்ளார்கள்.
அவரது வீட்டு வாசல் முன்பு கூடிய அந்த இளைஞர்கள், இரும்பு கம்பிகளை கைகளில் பிடித்து சுழற்றியபடி Chloe பெயரைச் சொல்லி சத்தமிட்டுள்ளார்கள்.
அதை தட்டிக் கேட்டுள்ளார் Jamie. ஆகவே கோபமடைந்த அந்த இளைஞர்களில் ஒருவன் அவரைக் கத்தியால் குத்தியுள்ளான். அவர் அலறித்துடிக்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடோடி வந்த அவரது மனைவியான Candice, கணவர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு ஆம்புலன்சை அழைத்துள்ளார்.
ஆனால், மருத்துவ உதவிக்குழுவினரால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கிறது.
தற்போது, கொல்லப்பட்ட Jamieயின் புகைப்படமும், அவரது குடும்பத்தின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், இந்த துயர சம்பவம் தொடர்பாக பதின்ம வயதுள்ள (14) இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒரு சிறுவன் கொலை செய்ததாகவும், மற்றொரு சிறுவன் கொலைக்கு திட்டம் தீட்டியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களை காவலில் அடைத்துள்ள பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.