உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தோல்விக்கு பின்... கோஹ்லி வைத்த முக்கியமான கோரிக்கை!
இந்திய அணியின் கேப்டன் ஆன விராட் கோஹ்லி, உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தோல்விக்கு பின் சில விஷயங்களை கூறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி, கடந்த 18-ஆம் திகதி துவங்கியது. இதில் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்று, சாதனை படைத்தது.
இந்நிலையில், போட்டிக்கு பின் பேசிய கோஹ்லி, உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் அணியை தீர்மானிக்கு, ஒரு போட்டி மட்டும் போதாது, மூன்று போட்டி, ஒரு தொடர் போன்று நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணி சிறப்பாக, செயல்பட்டது, இந்த வெற்றிக்கு அவர் தகுதியானவர்கள் தான், இருப்பினும், இரண்டு ஆண்டுகால போராட்டம் என்பது, ஒரு போட்டி தீர்மானித்துவிட்டால், எப்படி? குறைந்தபட்சம் அந்த இறுதிப் போட்டி ஒரு தொடர் போன்று இருக்க வேண்டும். டெஸ்ட்டைப் பொறுத்தவரையில், ஒரே ஒரு போட்டி, உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் அணியை தீர்மானிப்பதில், எனக்கு உடன்பாடில்லை.
ஏனெனில், ஒரு உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் அணிக்கு, இந்த தொடரில் திரும்பி வரக் கூடிய திறன் உள்ளது. இதனால் இது குறித்து எதிர்காலத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த போட்டியை பொறுத்தவரை, கைல் ஜேமீன்சன், கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுதி உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு தனித்துவமாக விளங்கினார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, நியூசிலாந்தின் முதல் இன்னிங்சில் முகமது ஷமி மிகச்சிறந்தவராக இருந்தார், அதே நேரத்தில், இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பாண்ட் சிறப்பாக விளையாடி, ஒரு 139 ஓட்டம் என்ற இலக்கை எட்ட உதவியதாக கூறினார்.