கோலியின் திடீர் முடிவுக்கு பின்னணி காரணம் இது தான்! உண்மையை போட்டுடைத்த அவரின் பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவங்களிலும் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, நேற்று திடீரென உலகக் கோப்பைக்கு பின் தான் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த விரும்புவதாகவும், பணிச்சுமையை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக கோலி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கோலி திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கான காரணத்தை அவரது குழந்தை பருவ பயிற்சியளார் ராஜ்குமார் வெளிப்படுத்தியுள்ளார்.
கோலியின் அறிவிப்புக்கு பின் ANI-க்கு பேட்டியளித்த ராஜ்குமார், டி 20 உலகக் கோப்பையை வெல்ல விராட் கோலி அதிக உறுதியுடனும் கவனத்துடனும் இருக்கிறார்.
கடந்த சில வாரங்களில் நாங்கள் விவாதித்தோம், கோலி டெஸ்ட் போட்டிகளை விரும்புகிறார், நீண்ட காலத்திற்கு தலைமை தாங்க விரும்புகிறார்.
அதனால் அவர் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.