சமையல் கலைஞர்களுக்கு தடை..கோஹ்லி எடுத்த முடிவு
பிசிசிஐ அணி வீரர்கள் பிரத்யேக சமையல் கலைஞர்களை அழைத்து வர தடை விதித்ததால், விராட் கோஹ்லி வேறொரு முடிவை எடுத்துள்ளார்.
தடை
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் முடிந்த நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தோல்விகளை சந்தித்ததால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்திய கிரிக்கெட் வாரியமும் வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முக்கியமான ஒன்று பிரத்யேக சமையல் கலைஞர்களை வீரர்கள் உடன் அழைத்து வரக்கூடாது என்பதுதான்.
இதனால் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் உணவுகளைத்தான் வீரர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோஹ்லி முடிவு
இந்நிலையில், சாம்பியன் டிராஃபிக்கான பயிற்சியில் உள்ள விராட் கோஹ்லி புதிய முடிவை எடுத்துள்ளார்.
அதாவது துபாயில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தனக்கென ஏற்றவாறு உணவுகளை சமைக்க கூறி, அதனை தொடர் முழுவதும் டெலிவரி செய்யும் வகையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி, கோஹ்லியின் கோரிக்கையை ஏற்று ஹொட்டல் நிர்வாகமும் அவருக்கு உணவுகளை டெலிவரி செய்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |