கேப்டன் பதவியை விட்டு விலக மறுத்த கோலி! பிசிசிஐ கொடுத்த கெடு: வெளியான முக்கிய தகவல்
இந்திய அணிக்கான ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலக மறுத்துவிட்டதாகவும், அதன் பின் பிசிசிஐ இந்த அதிரடி முடிவில் இறங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பைகளை வென்றதில்லை. இதனால் அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால், நேற்று திடீரென்று இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ரோகித் இருப்பார் என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. இதைக் கண்ட கோலி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
ஏன் இப்படி திடீரென்று கோலி கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால், அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கோலி தன்னுடைய ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து தானாக விலகுவதற்கான ஒரு வாய்ப்பை பிசிசிஐ கொடுத்துள்ளது. இதற்காக நேரக் கெடுவும் கொடுக்கப்பட்டுள்ளது.
கோலி எந்த ஒரு பதிலும் சொல்லாத காரணத்தினால், பிசிசிஐ அதிரடியாக ரோகித்தை கேப்டனாக அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் கோலிக்கு ஒருநாள் கேப்டன் பதவியை விட்டு கொடுக்க பிடிக்கவில்லை என்பது தெரிகிறது. கோலியும் இதுவரை இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.