தயவு செய்து இதை பண்ணாதீங்க! குழந்தை வீடியோ வைரல் குறித்து கோலி வெளியிட்டுள்ள பதிவு
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கோலி, தன்னுடைய மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கோலி 84 பந்தில் 65 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
அரைசதம் அடித்த அவர் இதை தன்னுடைய மகளுக்கு அர்பணிப்பது போல் செய்கை செய்தார். அப்போது மைதானத்தின் கேலரியில் இருந்த அனுஷ்காசர்மா தன்னுடைய மகளுடன் வந்து, அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ இணைத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், கோலி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வணக்கம், இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எங்களுக்கு அளித்த அனைத்து அன்புக்கும் நன்றி. இந்த முக்கியமான நிகழ்வை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பெற்றோராக. , உங்களிடம் ஒரு எளிய கோரிக்கையை வைக்கிறோம். எங்கள் குழந்தையின் தனியுரிமையைப் பாதுகாக்க விரும்புகிறோம், உங்கள் உதவியும் ஆதரவும் எங்களுக்குத் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கோலி, தன்னுடைய மகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.